Total Pageviews

Sunday, March 27, 2011

இயற்கையின் சமநிலை - இயற்கையின் சுழற்சி

மழை பெய்வதால் எல்லாவற்றிலும் நீர் ததும்புகிறது.  செடி கொடிகள் வளர்கின்றன.  காய்கனிகள் காய்கிறது.  நெல் விளைகிறது.  தானியங்கள் விளைகிறது.  சகல ஜீவராசிகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.  மனிதன் காய்கறிகளை உண்கிறான்.  சில பிராணிகளையும் சாப்பிடுகிறான்.  ஆடு, மாடு போன்றவை செடிகொடிகளை சாப்பிடுகின்றன.  புலி, சிங்கம் போன்றவை ஆடு, மாடு, மான்களை சாப்பிடுகிறது.  தாவரங்களை உண்ணும் பிராணிகள், தாவரங்களை உண்டு வாழ்கின்றன.  விலங்குகளை உண்ணும் "மாமிசபட்சிணிகள்", தாவரங்களை உண்ணும் விலங்குகளை பிடித்து சாப்பிடுகின்றன. இது இயற்கையின் சமநிலை. இது இயற்கையின் சுழற்சி.  யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.  காலத்தின்  தேவைக்கு ஏற்ப இயற்கை புதிய வடிவங்களை எடுத்துக் கொள்கிறது. பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. புதிய விலங்குகள் தோன்றுகிறது. புதிய உருவங்கள் தோன்றுகிறது. ஆனால் அடிப்படை தத்துவம் ஒன்றே.  

No comments:

Post a Comment