Total Pageviews

Thursday, September 23, 2010

தென்னை மரம்

தென்னை மரம் - மிகவும் பயனுள்ள மரம்.
தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு பயன்படுகிறது
நாம் தேங்காயை சமையலுக்கு பயன்படுத்துகிறோம்
தேங்காய் பர்பி, பாயசம், தேங்காய் பால் போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்யவும், கூட்டு, பொரியல், போன்றவற்றில் சுவை சேர்க்கவும் தேங்காய் பயன்படுகிறது
இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது.
தேங்காய் மட்டை பலவித பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
தென்னங்கீற்றுகள் கூரை செய்ய பயன்படுகிறது
தென்னைகூரை போடப்பட்ட வீடு மிகவும் குளுமையாக இருக்கும்.
தேங்காய் மட்டைகளை மொட்டை மாடியில் போட்டு விட்டால் வீட்டிற்குள் வெயில் தெரியாது.
தென்னை மரம் கடலில் பயணம் செய்ய கட்டு மரம் செய்ய பயன்படுகிறது
இது போல் பல நூறு பயன் உள்ள தென்னை மரம் தெய்வத்தின் அவதாரம்.
ஆகவே தென்னை மரத்திற்கு நீர் ஊற்றுவது மிகவும் புண்ணியம் தரும் காரியம் ஆகும்.
தென்னை மரத்திற்கு நீர் ஊற்றுபவனுக்கு மிக்க செல்வம் கிடைக்கும்.
ஆகவே உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்திற்கு தினமும் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்
தென்னை மரம் வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான்.  
எழுதியவர் - சுகவனம் நடராஜன்

No comments:

Post a Comment