Total Pageviews

Tuesday, November 1, 2011

ஏழ்மையை ஒழிப்பது எப்படி?

ஏழ்மையை ஒழிப்பது எப்படி?

ஏழைகள் தங்கள் அறியாமையை போக்கிக் கொள்ள நிறைய அறிவு வளர்க்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
ஏழ்மையை ஒழிக்க அரசு தீட்டும் திட்டங்களை அறிந்து கொண்டு ஏழைகள் அத்திட்டங்களை சரியான முறையில் உபயோகபடுத்திக் கொண்டு நல்ல தொழில்கள் மூலமாக பணம் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
நல்ல கல்வி அறிவு பெற்ற ஏழைகள், அரசு அதிகாரிகள் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களில் ஊழல் செய்வதை அறிந்தால் அதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு புகார் கொடுத்து தெரியப்படுத்த வேண்டும்.
ஏழைகள் தங்கள பாடுபட்டு சம்பாதித்த பணத்தை போதைப் பொருட்கள், மது போன்ற தவறான வழிகளில் செலவழிக்காமல் வீட்டுக்கு தேவையான செலவுகளைச் செய்து மீதியை சேமித்தல் ஏழ்மை ஒழியும்.

No comments:

Post a Comment