Total Pageviews

Tuesday, October 18, 2011

மொழி

மொழி

கோடானுகோடி உயிரினங்கள் வாழும் பூமியில் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் தோன்றிய மனித இனத்தில் சிறந்த மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த பலவித ஒலிகளையும், பலவித சைகைகளையும் பயன்படுத்தி வந்தனர். பிறகு சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து மனிதர்கள் எழுப்பும் ஒலிகளுக்கு ஒரு ஒழுங்கான வடிவம் கொடுத்து பேசும் மொழி உறவானது. பேசும் மொழி பலவிதங்களில் வளர்ச்சி அடைந்து அவற்றிற்கு எழுத்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு பலபகுதிகளில் உள்ள மக்கள் பலவித பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களை உருவாக்கி, பல மொழிகளை தோன்றின. இந்த மொழிகள் பலவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து இப்போது பலவித புதிய கலப்பு மொழிகள் தோன்றி வருகின்றன இவ்வாறு மனித சிந்தனைகளை வெளிபடுத்த உதவும் மொழிகளில் பல புதிய மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மொழிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment